Skip to main content
ஒரு நாளில் எத்தனை முறை சிறுநீர் கழிப்பது ஆரோக்கியமானது
நம் உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுவது என்பது மிகவும் அவசியமானது. சராசரியாக ஒரு மனிதன் எவ்வளவு முறை சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தெரியுமா? நீங்கள் எத்தனை முறை சிறுநீர் கழிக்கிறீர்கள் என்பதை வைத்தே உங்களின் உடல் ஆரோக்கியமாக இருக்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடித்து விடலாம்.

நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா இல்லையா என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்னதாக சராசரியாக ஒருவர் எத்தனை முறை சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக ஒரு நாளைக்கு 4 முதல் 10 முறை சிறுநீர் கழிக்கலாம். சிறுநீர்ப்பையின் அளவு 2 கப் அளவு சிறுநீரை தேக்கி வைக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கும். சிறுநீரை 3 முதல் 5 மணி நேரம் வரை அடக்கி வைத்திருக்க உதவிடும்.

சிறுநீர் கழிக்கும் போது வலியோ அல்லது எரிச்சலோ உண்டானால் அதனை உடனடியாக கவனியுங்கள். குறைந்த நேரமோ அல்லது அதிக நேரமோ சிறுநீர் கழித்தால் அதுவும் ஆபத்தானது.

ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும் போது இருக்கும் நேர இடைவேளையை வைத்தே உங்களது உடல் ஆரோக்கியத்தை எளிதாக கணக்கிடலாம்.
இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் போது நடுவில் ஒரு முறை எழுந்து சிறுநீர் கழித்தால் அது சாதாரணமானது. சிலர் தூக்கத்தில் நடுவில் எழுந்தரிக்க மாட்டார்கள். இதுவும் சாதாரணமானது தான். ஆனால் இரண்டு முறைக்கும் அதிகமாக இரவுகளில் சிறுநீர்கழிக்க நேர்ந்தால் உங்கள் உடலில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதென்று அர்த்தம்.

சிறுநீரை அதிக நேரம் அடக்கி வைத்திருப்பது ஆபத்தானது. அடிக்கடி சிறுநீர் கழித்தால் அதிக நேரம் அடக்கி வைத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது.

அதிக நேரம் சிறுநீரை அடக்கி வைத்திருப்பதால் சிறுநீர்ப்பைக்கு பாதிப்புகள் வராது. மாறாக உங்களுக்கு வலியுண்டாகும். இதனால் உடலில் ஆரோக்கிய குறைவு ஏற்படும்.

வழக்கத்திற்கு மாறாக குறைவாகவோ அல்லது அதிகமாவோ சிறுநீர்கழித்தால் உடனடியாக மருத்துவரை சந்தியுங்கள். அதே போல சிறுநீர் கழிக்கும் போது வலியோ அல்லது எரிச்சலோ இருந்தால், சிறுநீரின் நிறம் மாறியிருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.


Comments

Popular posts from this blog

இன்னும் என்ன என்ன எண்ணற்ற வழியில் நம்மை ஒடுக்க முயல்வார்கள் , இயலாமையின் இமயம் ஆர்ய கற்பனை ஆதிக்க சக்தி !! ஐந்து நிமிட வாசிப்பு - ஆலடி எழில்வாணன் சமஸ்கிருதம் படித்தால் தான் மருத்துவ படிப்பு என்றார்கள் !   எங்களை சமஸ்கிருதம் படிக்ககூடாது என்றீர்கள் !! இட ஒதுக்கீட்டால் நீங்கள் முன்னேறுகிறீர்கள் என்றீர்கள் !   நல்ல மதிப்பெண் எடுத்து முன்னேறிய போது NEET என்றீர்கள் !! வீரத்தால் எங்களை வீழ்த்த இயலாத போது !   அறிவு தான் பெரிது என்றீர்கள் !! நாங்கள் அறிவிலும் முன்னேறிய போது உங்கள் ! அறிவு தரமற்றது என்றீர்கள் !! மாணவி அனிதாவின் இறப்பு உங்களின் இதயத்தை உலுக்கவில்லையா !! எத்தனை ஆயிரம் அனிதாக்கள் தங்களின் கனவை புதைத்து புழுங்குவது கேட்கவில்லையா !! நாளை வேளாண்மை கல்வி , பொறியியல் , கலை அறிவியல் , பட்டையப்படிப்பு , HSC, SSLC, ESLC, Primary மற்றும் குழந்தைகள் மையம் என பல பல தேர்வுகள் வைத்து நம்மை முடக்க பார்ப்பார்கள் . ஆர்ய மாயை மாய்ந்து போகட்டும் !! சமூகநீதி !...
“பவள விழாவில் கிடைத்த ரெஸ்பான்ஸ்” - அடுத்த திட்டத்தில் வைகோ! நீண்ட நாள்களுக்குப் பிறகு தி.மு.க மேடையில் ஏறிய வைகோவுக்கு, அதே மேடையில் கிடைத்த ரெஸ்பான்ஸினால் உற்சாகத்தில் உள்ளார்.  முரசொலியின் பவள விழா பொதுக்கூட்டம் நேற்று மாலை சென்னை கொட்டிவாக்கத்தில் நடைபெற்றது. ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி மழையினால் பாதியுடன் முடிக்கப்பட்ட இந்த விழாவை இரண்டாவது முறையாக நடத்தியது தி.மு.க. மழையால் கூட்டம் நிறுத்தப்பட்டதன் பலனை வைகோ அறுவடை செய்துவிட்டார். நிறுத்தப்பட்ட விழாவில் வைகோவின் பெயர் அழைப்பாளர்கள் பட்டியலில் இல்லை. ஆனால், அதன்பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினால் தி.மு.க-வுடன் நெருக்கமானார்   வைகோ . கருணாநிதியை அவர் வீட்டுக்கே சென்று சந்தித்தார். இதைத் தொடர்ந்து முரசொலி பவள விழா இரண்டாவது முறையாக நடைபெற இருந்ததில் வைகோவின் பெயரும் இடம்பெற்றது. தி.மு.க-வின் மேடையில் பல ஆண்டுகளுக்குப் பின் ஏறப்போகும் உற்சாகம் வைகோவிடம் ஏற்பட்டது. சென்னை கொட்டிவாக்கத்தில் நடைபெற்ற முரசொலி பவள விழாவில் அனைத்துத் தலைவர்களுக்கும் சேர் போடப்பட்டிருந்தது. சேரில் தலை...