Skip to main content

அமாவாசையில் பிறந்தால்

சாதாரணமாக ஆத்மகாரகன் சூரியன், மனோகாரன் சந்திரன் இவ்விரண்டும் சந்திக்கும் நாள் அமாவாசை ஆகும். எனவே அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளுக்கு அதிக திறமை இருக்கும். அமாவாசை ‌தித‌ி‌யிலு‌ம், பெளர்ணமி திதியிலும்தான் ஒன்பது கிரகங்களும் வலுவடைகின்றன. 

திதி செளம்ய தோஷம் என்று ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகிறது. அதாவது, குறிப்பிட்ட திதியில் பிறந்தால் அன்றைய தினம் ஒரு சில கிரகங்கள் வலுவிழக்கும். அதுதான் திதி செளம்ய தோஷம். ஆனால் அமாவாசை மற்றும் பெளர்ணமி திதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு எ‌ந்த ‌தி‌தி செ‌ள‌ம்ய தோஷமும் இருக்காது.

அதாவது துதியை திதியன்று தனுசு, மீனம் வலுவிழக்கும், பிரதமை திதியன்று துலாம், மரகம் வலுவிழக்கும், சதுர்த்தி திதியன்று கும்பம், ரிஷபம் வலுவிழக்கும். ஆனால் பெளர்ணமி, அமாவாசை திதியில் எல்லா கிரகங்களும் வலுவடைவதால் அவர்களுக்கு எந்த செளம்ய தோஷமும் கிடையாது.

அதனால் இவர்களுக்கு மூளை பலம் அ‌திக‌ம். வாய்ப்புகளுக்காக காத்திருக்காமல், வாய்ப்புகளை அவ‌ர்களே உருவாக்குவார்கள். அதற்காக சில தவறுகளை அவர்கள் அறியாம‌ல் செய்வார்கள். 

சுயநலக்காரர்களாக இருக்க மாட்டார்கள்... திறமைசாலிகளாக இருப்பார்கள், அவ‌ர்களது ‌திறமையை மற்றவர்கள் அங்கீகரிக்க மாட்டார்கள், அதற்காக வெறுத்து அவர்கள் தங்களைத் தாங்களே தலைவனாகவோ அரசனாகவோ பிரகடனப்படுத்திக் கொள்வர். அதனா‌ல் அவர்களை தலைக் கனம் பிடித்தவ‌ர்கள் என்று கூறுவர். 

அவர்களுடன் இருப்பவர்களுக்கு மட்டுமே அவ‌ர்களது த‌ந்‌திர‌ம் தெரியும். சில சமயங்களில் அமாவாசை‌யி‌ல் ‌பிற‌ந்தவ‌ர்க‌ள் செ‌ய்யு‌ம் த‌ந்‌திர‌ங்க‌ள் அவ‌ர்களுட‌ன் இரு‌ப்ப‌வ‌ர்களு‌க்கே பு‌ரியாது. 2002ல் பேசியதற்கு 2005ல் தான் மற்றவர்களுக்கு விவரம் பு‌ரியு‌ம். 

அமாவாசையி‌ல் ‌பிற‌ந்தவ‌ர்க‌ள் ஏதாவது ஒரு மன வறுத்தத்திலேயே இருப்பார்கள், ஒரு தேடல் இருக்கும். இருப்பதை வைத்துக் கொண்டு திருப்தி அடைய மாட்டார்கள். ஒரு விதமான மன உளைச்சலுடன் இருப்பார்கள். ஏனெனில் அமாவாசையன்று சந்திரன் வலுவிழப்பதுதான். சந்திரன் மனோகாரகன் என்பதால் எப்போதும் ஒருவித மன சஞ்சலத்திலேயே இருப்பார்கள். சாதித்துவிட்ட பின்னரும் இன்னமும் சாதிக்கவில்லை சாதிக்கவில்லை என்றே மன உளைச்சலில் இருப்பர். 

அமாவாசையில் பிறந்தவர்கள் நிச்சயம் திருடுபவர்கள்தான். ஆனால் பொருட்களை அல்ல, மனதைத் திருடுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். அமாவாசையில் பிறந்தவர்கள் அறிவியல் திருடர்கள், அவ‌ர்க‌ள் எடு‌த்த முடிவை மா‌ற்‌றி‌க்கொ‌ள்ள மா‌ட்டா‌ர்க‌ள், முடிவு எடு‌த்தா‌ல் எடு‌த்ததுதா‌ன்.

நல்ல வாழ்க்கை துணை அமையும், ஆனாலு‌ம் இ‌ன்னு‌ம் ந‌ல்லவராக அமை‌ந்‌திரு‌க்கலாமே எ‌ன்று ‌எ‌ண்ணுவ‌ர். சாப்பிடும் வரை திருப்தி அடைவர், பிறகு குறை சொல்வார்கள். எல்லாவற்றிலும் திறன்பட செய்ய வேண்டும் என்று எண்ணுவார்கள். தாய் தந்தையை நேசிப்பவர்களாக இருப்பர். 

Comments

Popular posts from this blog

இன்னும் என்ன என்ன எண்ணற்ற வழியில் நம்மை ஒடுக்க முயல்வார்கள் , இயலாமையின் இமயம் ஆர்ய கற்பனை ஆதிக்க சக்தி !! ஐந்து நிமிட வாசிப்பு - ஆலடி எழில்வாணன் சமஸ்கிருதம் படித்தால் தான் மருத்துவ படிப்பு என்றார்கள் !   எங்களை சமஸ்கிருதம் படிக்ககூடாது என்றீர்கள் !! இட ஒதுக்கீட்டால் நீங்கள் முன்னேறுகிறீர்கள் என்றீர்கள் !   நல்ல மதிப்பெண் எடுத்து முன்னேறிய போது NEET என்றீர்கள் !! வீரத்தால் எங்களை வீழ்த்த இயலாத போது !   அறிவு தான் பெரிது என்றீர்கள் !! நாங்கள் அறிவிலும் முன்னேறிய போது உங்கள் ! அறிவு தரமற்றது என்றீர்கள் !! மாணவி அனிதாவின் இறப்பு உங்களின் இதயத்தை உலுக்கவில்லையா !! எத்தனை ஆயிரம் அனிதாக்கள் தங்களின் கனவை புதைத்து புழுங்குவது கேட்கவில்லையா !! நாளை வேளாண்மை கல்வி , பொறியியல் , கலை அறிவியல் , பட்டையப்படிப்பு , HSC, SSLC, ESLC, Primary மற்றும் குழந்தைகள் மையம் என பல பல தேர்வுகள் வைத்து நம்மை முடக்க பார்ப்பார்கள் . ஆர்ய மாயை மாய்ந்து போகட்டும் !! சமூகநீதி !...
“பவள விழாவில் கிடைத்த ரெஸ்பான்ஸ்” - அடுத்த திட்டத்தில் வைகோ! நீண்ட நாள்களுக்குப் பிறகு தி.மு.க மேடையில் ஏறிய வைகோவுக்கு, அதே மேடையில் கிடைத்த ரெஸ்பான்ஸினால் உற்சாகத்தில் உள்ளார்.  முரசொலியின் பவள விழா பொதுக்கூட்டம் நேற்று மாலை சென்னை கொட்டிவாக்கத்தில் நடைபெற்றது. ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி மழையினால் பாதியுடன் முடிக்கப்பட்ட இந்த விழாவை இரண்டாவது முறையாக நடத்தியது தி.மு.க. மழையால் கூட்டம் நிறுத்தப்பட்டதன் பலனை வைகோ அறுவடை செய்துவிட்டார். நிறுத்தப்பட்ட விழாவில் வைகோவின் பெயர் அழைப்பாளர்கள் பட்டியலில் இல்லை. ஆனால், அதன்பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினால் தி.மு.க-வுடன் நெருக்கமானார்   வைகோ . கருணாநிதியை அவர் வீட்டுக்கே சென்று சந்தித்தார். இதைத் தொடர்ந்து முரசொலி பவள விழா இரண்டாவது முறையாக நடைபெற இருந்ததில் வைகோவின் பெயரும் இடம்பெற்றது. தி.மு.க-வின் மேடையில் பல ஆண்டுகளுக்குப் பின் ஏறப்போகும் உற்சாகம் வைகோவிடம் ஏற்பட்டது. சென்னை கொட்டிவாக்கத்தில் நடைபெற்ற முரசொலி பவள விழாவில் அனைத்துத் தலைவர்களுக்கும் சேர் போடப்பட்டிருந்தது. சேரில் தலை...