Skip to main content
சிவன் கஞ்சா குடிப்பவரா ? அவர் போதையில் இருப்பது உண்மைதானா ?
சிவன் தன் கையில் கஞ்சாவை வைத்துக்கொண்டிருப்பது போல பல படங்கள் இணையத்தில் இருக்கின்றன. அதோடு அவர் எந்நேரமும் போதையில் தான் இருப்பார் என்று சிலர் கூறுவதும் உண்டு. இதற்கான விடையை நாம் அறிவியல் ரீதியாக ஆராய்வோம் வாருங்கள்.

இந்த காலத்தில் பலர் போதைக்கு அடிமையாகி மடிகின்றனர். அவர்கள் மதுவை அருந்துவதற்கு காரணமே போதையில் இருக்க வேண்டும் என்பதற்காக தான். ஆனால் மதுவை அருந்திய சில மணி நேரங்களிலேயே அவர்கள் மயங்கி விழுவதுண்டு.
சிவனும் போதையில் தான் இருக்கிறார். அதனால் தான் அவருக்கும் சோமேஸ்வரர் என்றொரு பெயரும் உண்டும். சோமம் என்றால் போதை என்று தானே அர்த்தம். ஆனால் அவர் போதைக்காக எதையும் அருந்துவது கிடையாது, போதையில் இருக்கும்போது மயங்குவதும் கிடையாது. இது சாத்தியமா என்றால்? சாத்தியமே.

அமெரிக்க விஞ்ஞானிகள், சில வருடங்களுக்கு முன்பு மனிதனின் மூலை குறித்து ஒரு ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் முடிவில் அவர்களுக்கு ஒரு அற்புதானமான விஷயம் கிடைத்தது. மனித உடலானது தனக்குள்ளே போதையை சுரக்கும் ஆற்றலை கொண்டது என்பதே அந்த ஆய்வின் முடிவு.
நமது நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் பலரும் இந்த போதையில் இருந்திருக்கலாம். அவர்கள் தங்கள் உடல் மூலமே போதையை ஏற்படுத்திக்கொண்டிருக்கலாம். ஆனால் அதன் காரணமாக அவர்கள் என்றும் நிலை தவறியதில்லை, மயங்கியதும் இல்லை. ஒரு மனிதன் தனக்குள்ளே போதையை சுரக்க செய்வதென்பது சாதாரண விஷயம் இல்லை.


போதையை சுரக்க செய்ய ஒருவன் பல விதமான தியானங்களையும் யோகங்களையும் செய்யவேண்டும். அந்த போதையானது அவனுக்கு ஆனந்தத்தை தருமே தவிர அவன் உடலை பாதிக்காது, அறிவை பாழாக்காது, மயக்கத்தை தூண்டாது. அதுவே நிலையான ஆனந்தம். இந்த உண்மை நிலை அறியாத சிலர் தான், சிவன் தன் கையில் கஞ்சா வைத்திருப்பது போன்ற படங்களை பரப்புவது, சிவன் எந்நேரமும் கஞ்சா போதையில் திளைப்பவர் என்ற தவறான செய்திகளை பரப்புவர்.

Comments

Popular posts from this blog

இன்னும் என்ன என்ன எண்ணற்ற வழியில் நம்மை ஒடுக்க முயல்வார்கள் , இயலாமையின் இமயம் ஆர்ய கற்பனை ஆதிக்க சக்தி !! ஐந்து நிமிட வாசிப்பு - ஆலடி எழில்வாணன் சமஸ்கிருதம் படித்தால் தான் மருத்துவ படிப்பு என்றார்கள் !   எங்களை சமஸ்கிருதம் படிக்ககூடாது என்றீர்கள் !! இட ஒதுக்கீட்டால் நீங்கள் முன்னேறுகிறீர்கள் என்றீர்கள் !   நல்ல மதிப்பெண் எடுத்து முன்னேறிய போது NEET என்றீர்கள் !! வீரத்தால் எங்களை வீழ்த்த இயலாத போது !   அறிவு தான் பெரிது என்றீர்கள் !! நாங்கள் அறிவிலும் முன்னேறிய போது உங்கள் ! அறிவு தரமற்றது என்றீர்கள் !! மாணவி அனிதாவின் இறப்பு உங்களின் இதயத்தை உலுக்கவில்லையா !! எத்தனை ஆயிரம் அனிதாக்கள் தங்களின் கனவை புதைத்து புழுங்குவது கேட்கவில்லையா !! நாளை வேளாண்மை கல்வி , பொறியியல் , கலை அறிவியல் , பட்டையப்படிப்பு , HSC, SSLC, ESLC, Primary மற்றும் குழந்தைகள் மையம் என பல பல தேர்வுகள் வைத்து நம்மை முடக்க பார்ப்பார்கள் . ஆர்ய மாயை மாய்ந்து போகட்டும் !! சமூகநீதி !...
“பவள விழாவில் கிடைத்த ரெஸ்பான்ஸ்” - அடுத்த திட்டத்தில் வைகோ! நீண்ட நாள்களுக்குப் பிறகு தி.மு.க மேடையில் ஏறிய வைகோவுக்கு, அதே மேடையில் கிடைத்த ரெஸ்பான்ஸினால் உற்சாகத்தில் உள்ளார்.  முரசொலியின் பவள விழா பொதுக்கூட்டம் நேற்று மாலை சென்னை கொட்டிவாக்கத்தில் நடைபெற்றது. ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி மழையினால் பாதியுடன் முடிக்கப்பட்ட இந்த விழாவை இரண்டாவது முறையாக நடத்தியது தி.மு.க. மழையால் கூட்டம் நிறுத்தப்பட்டதன் பலனை வைகோ அறுவடை செய்துவிட்டார். நிறுத்தப்பட்ட விழாவில் வைகோவின் பெயர் அழைப்பாளர்கள் பட்டியலில் இல்லை. ஆனால், அதன்பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினால் தி.மு.க-வுடன் நெருக்கமானார்   வைகோ . கருணாநிதியை அவர் வீட்டுக்கே சென்று சந்தித்தார். இதைத் தொடர்ந்து முரசொலி பவள விழா இரண்டாவது முறையாக நடைபெற இருந்ததில் வைகோவின் பெயரும் இடம்பெற்றது. தி.மு.க-வின் மேடையில் பல ஆண்டுகளுக்குப் பின் ஏறப்போகும் உற்சாகம் வைகோவிடம் ஏற்பட்டது. சென்னை கொட்டிவாக்கத்தில் நடைபெற்ற முரசொலி பவள விழாவில் அனைத்துத் தலைவர்களுக்கும் சேர் போடப்பட்டிருந்தது. சேரில் தலை...